ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா ஐந்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பீரியட் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி, மார்ச் மாத இறுதிக்குள் சூர்யா 42வது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் இதுவரை சூர்யா நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.