பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் மீது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாக நடந்து வருகிறார். இப்படி சோகத்தில் இருந்துவரும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள 'டெல் இட் லைக் எ உமன்' என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள அப்ளாஸ் என்கிற பாடல் 95 வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், “இந்த மகிழ்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே வரவில்லை. ஆஸ்கர் விருதுடன் நாங்களும் இணைந்து இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. 'டெல் இட் லைக் எ உமன்' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. மேலும் இதே பிரிவில் போட்டிக்கு தேர்வாகியுள்ள நாட்டு நாட்டு பாடலின் வெற்றிக்காக ஆர்ஆர்ஆர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.