முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 25ல் வெளியான ஹிந்திப் படம் 'பதான்'. இந்தப் படம் முதல் நாள் வசூலாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டும் சுமார் 69 கோடி வசூல், வெளிநாடுகளில் 37 கோடி வசூல் என முதல் நாள் வசூலாக 106 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் ஒரு படம் வெளியான முதல் நாளில் 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. 2023ல் முதல் நாளில் 100 கோடி வசூலைக் கடந்த முதல் படம் இது. இந்த சாதனையை இதற்கு முன்பு ஐந்து படங்கள் கடந்துள்ளன.
ஆர்ஆர்ஆர் (220 கோடி), பாகுபலி 2 (210 கோடி), கேஜிஎப் 2 (155) கோடி, சாஹோ (130 கோடி), 2.0 (102) கோடி என முதல் நாளில் வசூலித்துள்ளன.
நேற்று இரண்டாவது நாள் வசூலாக இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 80 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடிக்கும் மேலும் வசூலித்து இரண்டாவது நாளிலும் 100 கோடி வசூலித்திருக்கலாம் என்பது தகவல். நேற்று விடுமுறை தினம் என்பதால் முதல் நாளை விடவும் வசூல் அதிகமாக இருந்ததாம்.
ஷாரூக்கான் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 9 படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. அவற்றில் 400 கோடி வசூலைக் கடந்து 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'பதான்' முறியடிக்கும் என்கிறார்கள். அது இந்த வார இறுதிக்குள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குறிப்பு - வசூல் தகவல்கள் அதிகாரப்பூர்வத் தகவல்கள் அல்ல.