ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
குண்டனப்பு பொம்மா, செகண்ட் ஹேண்ட் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா. அதன் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதால் மன அழுத்த்ததில் இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் கொண்டாபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக உறவினர்கள் அவரை விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை மரணம் தொடர்பான போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.