இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் உருவான கன்னடப் படமான 'காந்தாரா' கடந்த வருடம் வெளிவந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. வட கர்நாடகா கடற்கரைப் பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் குல தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து வெளிவந்த அப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலைப் பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். “படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கான ஆராய்ச்சியை செய்வதற்காக கர்நாடகா கடற்கரைப் பகுதிக்கு தனது உதவியாளர்களுடன் ரிஷப் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்ட்டிற்கு ஏற்றபடி மழைக் காலத்தில் நடைபெற உள்ளது. முதல் பாகத்தை விடவும் கூடுதலான செலவில் படத்தைத் தயாரிக்க உள்ளோம். அடுத்த வருட கோடைக் காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
'காந்தாரா 2' படம் 'காந்தாரா' படத்திற்கு முந்தைய கதையைச் சொல்லக் கூடிய படமாக எடுக்கப்பட உள்ளதாம். காந்தாரா படத்தில் இடம் பெற்ற காவல் தெய்வம், காவல் தெய்வத்தின் கற்சிலையைக் கொண்டு சென்ற மலைநாட்டு மன்னன், இயற்கை வழிபாடு ஆகியவை 'காந்தாரா 2' படத்தின் கதையாக எழுதப்பட உள்ளது.