பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! |

கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. அதையடுத்து தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றவர் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தார். இந்நிலையில் வருகிற 20ம் தேதியிலிருந்து இடைவிடாமல் படங்களில் தான் நடிக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு தற்போது தனது கைவசம் ஏழு படங்கள் மட்டுமின்றி 2 வெப் தொடர்களும் இருப்பதாகவும் கூறும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் நான் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி சினிமாவில் நான் முன்னணி கதாநாயகி ஆனதிலிருந்து 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர்களை வளர்க்கும் ஒரு அம்மாவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை எடுத்துக் கொடுத்ததாக கூறும் ஹன்சிகா, சினிமாவில் நடிப்பதை கடந்து இதுபோன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுக்கிறது. நான் இப்படி குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதற்கு முக்கிய காரணமே எனது அம்மாதான். இதன் மூலம் எனக்கு கிடைத்து வரும் இந்த சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டு இருக்கிறார் ஹன்சிகா.




