ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. அதையடுத்து தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றவர் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தார். இந்நிலையில் வருகிற 20ம் தேதியிலிருந்து இடைவிடாமல் படங்களில் தான் நடிக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு தற்போது தனது கைவசம் ஏழு படங்கள் மட்டுமின்றி 2 வெப் தொடர்களும் இருப்பதாகவும் கூறும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் நான் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி சினிமாவில் நான் முன்னணி கதாநாயகி ஆனதிலிருந்து 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர்களை வளர்க்கும் ஒரு அம்மாவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை எடுத்துக் கொடுத்ததாக கூறும் ஹன்சிகா, சினிமாவில் நடிப்பதை கடந்து இதுபோன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுக்கிறது. நான் இப்படி குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதற்கு முக்கிய காரணமே எனது அம்மாதான். இதன் மூலம் எனக்கு கிடைத்து வரும் இந்த சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டு இருக்கிறார் ஹன்சிகா.