இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம மூலம் அடிக்கடி துபாய் சென்று வந்து தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. இவருக்கு இந்த கடத்தலில் உறுதுணையாக இருந்தவர், இன்னும் சொல்லப்போனால் இந்த கடத்தல் விவகாரத்தில் ரன்யா ராவை ஈடுபடுத்தி அது சம்பந்தப்பட்ட பல நபர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கன்னட நடிகர் ஆன தருண் ராஜ். இவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அதே சமயம் சிறையில் இவருக்கு மெத்தை, டிவி, மொபைல் போன் மற்றும் சிறப்பு உணவு என முறைகேடாக பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல ரசிகர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கும் இதுபோன்று முறைகேடான சலுகைகள் வழங்கப்பட்டதால் தான் அவரை வேறு சிறைக்கு மாற்றினார்கள் அதேபோல இந்த சொகுசு வசதி முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடிகர் தருண் ராஜும் வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று போலீசார் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.