ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம மூலம் அடிக்கடி துபாய் சென்று வந்து தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. இவருக்கு இந்த கடத்தலில் உறுதுணையாக இருந்தவர், இன்னும் சொல்லப்போனால் இந்த கடத்தல் விவகாரத்தில் ரன்யா ராவை ஈடுபடுத்தி அது சம்பந்தப்பட்ட பல நபர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கன்னட நடிகர் ஆன தருண் ராஜ். இவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அதே சமயம் சிறையில் இவருக்கு மெத்தை, டிவி, மொபைல் போன் மற்றும் சிறப்பு உணவு என முறைகேடாக பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல ரசிகர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கும் இதுபோன்று முறைகேடான சலுகைகள் வழங்கப்பட்டதால் தான் அவரை வேறு சிறைக்கு மாற்றினார்கள் அதேபோல இந்த சொகுசு வசதி முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடிகர் தருண் ராஜும் வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று போலீசார் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.




