ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படத்தின் வசூல் பற்றி இதுவரை படத்தின் தயாரிப்பாளரோ, வினியோகஸ்தரோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அப்படத்துடன் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு' படம் ஒரு வாரத்தில் ரூ.210 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்கள்.
'துணிவு' படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என அஜித் ரசிகர்கள் கடந்த பத்து நாட்களாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் படக்குழு சார்பில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, தயாரிப்பாளர் போனி கபூருக்கு நெருக்கமானவரும் 'துணிவு' படத்தின் வினியோகஸ்தர்களில் ஒருவருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் டுவிட்டரில் புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், “வெளிநாடுகளைப் போல வெளிப்படையான பாக்ஸ் ஆபீஸ் டிராக்கிங் முறை வர நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என டிராக்கர்கள் விமர்சகர்கள் ஆகியோருக்கு சொல்லிக் கொள்கிறேன். அதுவரை பாக்ஸ் ஆபீஸ் சாதனை என்ன என்பதைப் பற்றி சண்டையிட்டுக் கொள்ளாமல் சினிமாவை அதன் தூய்மையான தன்மையுடன் ரசியுங்கள். இரண்டு படங்களையும் வெற்றிப் படமாக்கியதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் டிராக்கர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் எந்த ஒரு ஆதராமும் இல்லாமல் 'துணிவு' படத்தை விடவும், 'வாரிசு' படத்தின் வசூல் அதிகம் என்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் கடந்த ஒரு வாரமாகவே ராகுல் பதிலுக்கு கமெண்ட் போட்டு வந்தார். இந்நிலையில் இப்படி ஒரு பதிவை இன்று அதிகாலையில் பதிவிட்டுள்ளார்.
படத்தை வெளியிட்டுள்ள வினியோகஸ்தர்களுக்கே படத்தின் வசூல் என்னவென்று தெரியாத நிலையில், இந்த டிராக்கர்கள் தொடர்ந்து பொய்யான வசூல் விவரங்களைப் பதிவிட்டு வருவதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.