ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரேநாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என ஏற்கனவே ரஜினி படங்களில் நடித்தவர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளார்கள். அதே சமயம் கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதற்காக இணைந்தார். ரஜினியும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நகைச்சுவை நடிகரான சுனில் இந்த படத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். ஏற்கனவே புஷ்பா படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய சுனில், தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ரஜினி நடிக்கும் இந்த ஜெயிலர் படத்தில் மூன்று மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இடம் பெற்றிருப்பது பான் இந்தியா ரிலீஸாக இந்த படம் வெளியாகும்போது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.