பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை வைப்பதற்கு அதிகம் விரும்புவதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் பதான் படத்தில் பைக் சண்டை காட்சிகளும் ஓடும் ட்ரெயின் மேல் நடக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படம் உளவுத்துறை வீரர் மற்றும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு இடையே நடைபெறும் போராட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்திற்காக ஷாருக்கானும் அவருடன் இணைந்து பயணிக்கும் தீபிகா படுகோனும் பிரபலமான ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்கள். அவையும் தத்ரூபமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சித்தார்த் ஆனந்த்.