பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஜன., 11) உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் 'வாரிசு'. அஜித் நடித்துள்ள 'துணிவு' படமும் இப்படமும் நாளை போட்டி போட்டு வெளியாக உள்ளன.
அதிகாலை சிறப்புக் காட்சியாக இன்று நள்ளிரவு 1 மணிக்கு 'துணிவு' படத்தையும், அதிகாலை 4 மணிக்கு 'வாரிசு' படத்தையும் நடத்த வேண்டுமென இரண்டு படங்களையும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தியேட்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் அதன்படியே சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
நள்ளிரவு 1 மணிக்கே 'துணிவு' காட்சி நடப்பதால் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுக்கள்தான் முதலில் வரும். 'வாரிசு' படம் பற்றிய பேச்சுக்கள் காலை 7 மணிகே வரும். இதனால் 'வாரிசு' குழுவினர் வேறு ஏற்பாட்டை செய்துள்ளனர். இன்று இரவு சினிமா பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறப்புக் காட்சியை சென்னையில் நடத்த உள்ளார்கள். அதனால், 'துணிவு' படத்திற்கு முன்பாகவே 'வாரிசு' பற்றிய பேச்சுக்கள் இன்றிரவே வெளியாகிவிடும்.
இந்த விஷயத்தில் 'துணிவு' படத்தை விட 'வாரிசு' படத்தை முந்த வைக்க வேண்டும் என படக்குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளதாகத் தகவல். இந்த மாற்றத்தை 'துணிவு' படத்தை மொத்தமாகவும், 'வாரிசு' படத்தை ஐந்து ஏரியாக்களில் மட்டும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் அனுமதிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.