ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
வடக்கு டில்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போதை ஆசாமிகள் ஓட்டி வந்த காரில் மோதி 20 வயது அஞ்சலி சிங் பலியானார். இந்த விபத்து கொடூர விபத்தாக மாறியது. மோதிய வேகத்தில் காரின் அடியில் சிக்கிய அஞ்சலி தேவியை 16 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றிருக்கிறார்கள். உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் அஞ்சலி சிங். சம்பந்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொடூர விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சலியின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்திருக்கிறது. இப்போது அவரது குடும்பம் நிர்கதியாகி உள்ளது. இந்த நிலையில் அஞ்சலி சிங் பற்றி கேள்விப்பட்ட ஷாருக்கான் அவரது குடும்பத்திற்கு கணிசமான நிதி உதவி அளித்துள்ளார். ஷாருக்கான் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியை வழங்கி உள்ளார். எவ்வளவு நிதி என்பதை அவர் அறிவிக்கவில்லை. ஷாருக்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.