மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்டி காலனி. அதன்பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அவர், தற்போது டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த அருள்நிதியே நாயகனாக நடிக்கிறார். அவருடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், அர்ச்சனா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இருள் ஆளப்போகிறது என்ற டைட்டில் உடன் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், படத்தின் டெக்னீஷியன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.