பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் தயங்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி இந்த வருடம் அவர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி என்கிற இரண்டு படங்களும் வரும் சங்கராந்தி பண்டிகை அன்று ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் வால்டர் வீரைய்யா படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், குறிப்பாக அந்த படத்தில் ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்கிற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
“அந்த பாடல் காட்சியை பனி சூழ்ந்த மலைப்பகுதியில் படமாக்கினார்கள். அந்த காட்சியில் சேலை அணிந்து கொண்டு நடித்தேன். அப்படிப்பட்ட பனிப்பிரதேசத்தில் சேலை அணிந்து கொண்டு ஒரு பெண் நடிப்பது என்பது எவ்வளவு வசதி குறைவானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இனி இதுபோன்று இப்படி ஒரு காட்சியில் நடிக்கும் சூழ்நிலை வந்து விடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.. ஆனால் ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளை தான் விரும்பி ரசிக்கிறார்கள் என்றும் அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.