ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது ஒரு கதையை அவரிடம் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் ஜெயம் ரவி ஒரு ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அகிலன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை இயக்கிவிட்டு அடுத்து ஜெயம் ரவியை லோகேஷ் இயக்க உள்ளாரா அல்லது விஜய்யின் 67வது படத்திலேயே அவரை நடிக்க வைக்க பேசி உள்ளாரா என்பது விரைவில் தெரிய வரும்.