காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பொதுவாக விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவும் . திரையரங்குகளில் ரசிகர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படும். இந்நிலையில் 1995-ல் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்து வெளியான 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் வருகின்ற வரும் ஜனவரி 6-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரை அரங்கில் ராஜாவின் பார்வையிலே திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும் , அஜித் நடித்துள்ள துணிவு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது .விஜய், அஜித்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.




