திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பொதுவாக விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவும் . திரையரங்குகளில் ரசிகர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படும். இந்நிலையில் 1995-ல் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்து வெளியான 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் வருகின்ற வரும் ஜனவரி 6-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரை அரங்கில் ராஜாவின் பார்வையிலே திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும் , அஜித் நடித்துள்ள துணிவு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது .விஜய், அஜித்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.