மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.
இப்படத்தை தமிழகத்தில் விநியோகஸ்தர் அன்புசெழியன் வெளியிட்டிருந்தார். இப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தனது பங்காக நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதேநேரம் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டுள்ளது.