'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.
இப்படத்தை தமிழகத்தில் விநியோகஸ்தர் அன்புசெழியன் வெளியிட்டிருந்தார். இப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தனது பங்காக நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதேநேரம் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டுள்ளது.