சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

சென்னை தரமணியில் உள்ளது எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி. அதை ஒட்டி அமைந்துள்ளது பிலிம் சிட்டி. இங்கு காவல் நிலையம், பஸ் நிலையம், பங்களா, குடிசை, பாலம் உள்ளிட்ட நிரந்தர அரங்கங்கள் உள்ளது. இதுதவிர நவீன இண்டோர் ஸ்டூடியோவும் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு பராமரிப்பு இல்லாதால் செட்டுகள் வீணானதுடன், படப்பிடிப்பு பகுதிகள் புல், புதர்கள் முளைத்து வீணாகி உள்ளது.
நகருக்குள் இருக்கும் ஒரே பிலிம் சிட்டி இதுதான் இதை சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக திரைத்துறையினரால் வைக்கப்பட்டது. தற்போது தமிழக அரச இதனை சீரமைக்க முன்வந்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை சீரமைக்க 5 கோடி ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரப் பகுதி, தரமணியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. அங்கே சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடிய வகையில், அதற்குரிய புனரமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது.
5 கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திட்ட அறிக்கை வந்த பிறகு திரைப்படத் துறையினர் எதிர்பார்க்கக் கூடிய வகையில் முடிந்த அளவு அதில் அடிப்படை வசதிகளை செய்து தருவது தான் அரசினுடைய நோக்கம். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.