அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
விஷால் நடித்துள்ள லத்தி படம் வருகிற 22ம் தேதி வெளிவருகிறது. இதில் அவர் முதன் முறையாக போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார். படம் பற்றி விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடத்தைதான் போலீசின் கவுரவத்தை தீர்மானிக்கிறது. போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்களை பற்றித்தான் நிறைய படங்கள் வந்திருக்கிறது. கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை, அவர்களது பணிச்சூழல், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி வந்ததில்லை. இந்த படம் அவர்களை பற்றியது என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்த படத்தை தமிழ் நாட்டில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு காட்ட ஏற்பாடு செய்து வருகிறேன். பல நகரங்களில் அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இது நான் நடித்த படங்களிலேயெ பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்றது. படத்தின் கடைசி 40 நிமிட காட்சிகள் ஒரு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தில் நடக்கிறது. இதற்காக நான்கு மாதங்கள் வரை அங்கு சண்டை காட்சியை எடுத்தோம். பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும். வெறும் லத்தியை மட்டும் வைத்துக் கொண்டு எதிரிகளை சமாளிப்பதுதான் இந்த சண்டை காட்சியின் கான்செப்ட்.
எல்லா படங்களும் பைரசி பிரச்சினையை சந்திப்பது போன்று இந்த படமும் சந்திக்கும். ஆனால் அரசு நினைத்தால் பைரசியை ஒரே நாளில் ஒழித்து விட முடியும், பைரசி செய்பவர்களின் வீட்டு முகவரி, அவர்களது குடும்ப போட்டோ உள்ளிட்ட புள்ளி விபரங்கள் என்னிடம் இருக்கிறது. அரசு கேட்டால் அதைத் தரத் தயார். ஆபாச தளங்களை தடை செய்ய முடியும்போது பைரசி தளங்களை தடை செய்ய முடியாதா?. நான் அமைத்த குழு இன்னும் பைரசிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.
விலங்குகளை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால் அதற்கு முன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்து எனது கனவு படத்தை இயக்குவேன். ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்த்து ரசிக்கிறேனோ அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கதை அவருக்காக எழுதி வருகிறேன். அதையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு விஷால் பேட்டியளித்தார்.