கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

மருது மோகன் என்பவர் சிவாஜியின் சினிமா குறித்து ஆய்வு செய்து நூல் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இளையராஜா, பாரதிராஜா, ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசியதாவது: எங்கள் ஊர் பண்ணைபுரத்தில் ஒரு நாடக தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டருக்கு தங்கபதுமை பட வெளியீட்டின்போது வந்திருந்தார் சிவாஜி. அவருக்கு என் அண்ணன் பாஸ்கர் மைக் செட் வைத்து கொடுத்தார். அப்போது அவர் சிவாஜியை தொட்டுப் பார்த்தார். அன்று முதல் 3 நாள் காய்ச்சல் அவருக்கு. அப்படி நாங்கள் வியந்து பார்த்த சிவாஜியோடு நாங்கள் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
என்னை அவர் ராசா என்று அன்போடு அழைப்பார். முதல் மரியாதை படத்தில் அவரை பாடவைத்து அந்த புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டேன். சாதனை படத்தில் அவர் நடித்த காட்சியில் நானும் இருந்தது என் பாக்கியம்.
சிவாஜிக்கு அவர் சிவாஜி வேடத்தில் குதிரையில் இருக்கும் சிலை ஒன்றை பரிசாக வழங்க எஸ்.பி.முத்துராமன் நிதி திரட்டினார். என்னிடம் வந்து ரஜினி இவ்வளவு கொடுத்தார், கமல் இவ்வளவு கொடுத்தார், நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்று கேட்டார். நான் அதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன். அவர் அந்த தொகையை சொன்னார். அதை நான் தந்து விடுகிறேன் என்று சொல்லி கொடுத்தேன்.
இன்று நடிகர்கள் சாப்பிடும் உணவில் சிவாஜியின் பெயர் இருக்கிறது. சிவாஜிக்கு கொடுக்கும் பரிசில் எவர் பெயரும் இருக்க கூடாது என்று நானே கொடுத்தேன். இதுவரை நான் இந்த தகவலை சொன்னதும் இல்லை. இதை தம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. அவரை அவ்வளவு தூரம் நான் நேசித்தேன் என்பதற்காகவே இதை சொல்கிறேன். சிவாஜிக்கு திரையுலகமும், அரசுகளும் எதுவும் செய்யவில்லை. அவருக்கு செய்தது இந்த இளையராஜா மட்டும் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.