ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உத்தரப் பிரதேச மாநில போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்கள் .
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது மட்டுமின்றி நொய்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து என கூறி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 11 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்ததில் ஒருவர் கானா நாட்டை சேர்ந்தவர் மற்றும் இருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து சிம் கார்டு, லேப்டாப் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி கும்பல் இவை தவிர போலியான மேட்ரிமோனி வெப்சைட், டேட்டிங் வெப்சைட் என மேலும் பல போலியான வெப்சைட்கள் மூலம் மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது .