அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப் தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளவர். இவரது மகன் டைகர் ஷெராப் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப்பை கொல்வதற்காக தான் ஏவப்பட்டு உள்ளதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் மணீஷ்குமார் சுஜிந்தர் சிங் என்கிற நபர் தான் இந்த மிரட்டலை விடுத்தார் என கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இப்படி அவர் கொலை மிரட்டல் விடுத்தது பொய் என்று தெரிய வந்தது.
அதாவது அதற்கு முன்பாக மணீஷ்குமார் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அங்கே தனக்கு தரவேண்டிய உரிய சம்பளத்தை தராமல் மேனேஜரும் சூப்பர்வைசரும் இழுத்தடித்ததால் அவர்கள் மீது ஏற்பட்ட கோபத்தில் அவர்களை சிக்க வைப்பதற்காக அவர்கள் தான் தன்னை டைகர் ஷெராப்பை கொலை செய்ய ஏவினார்கள் என்றும் அதற்கான ஆயுதங்கள் வாங்குவதற்காக தனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும் போலீசில் பொய்யாக ஒரு மிரட்டலை அவர் வெளியிட்டார் என்பதும் விசாரணையில் பெரிய வந்துள்ளது. தற்போது அவர் மீது எப் ஐ ஆர் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.