ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப் தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளவர். இவரது மகன் டைகர் ஷெராப் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப்பை கொல்வதற்காக தான் ஏவப்பட்டு உள்ளதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் மணீஷ்குமார் சுஜிந்தர் சிங் என்கிற நபர் தான் இந்த மிரட்டலை விடுத்தார் என கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இப்படி அவர் கொலை மிரட்டல் விடுத்தது பொய் என்று தெரிய வந்தது.
அதாவது அதற்கு முன்பாக மணீஷ்குமார் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அங்கே தனக்கு தரவேண்டிய உரிய சம்பளத்தை தராமல் மேனேஜரும் சூப்பர்வைசரும் இழுத்தடித்ததால் அவர்கள் மீது ஏற்பட்ட கோபத்தில் அவர்களை சிக்க வைப்பதற்காக அவர்கள் தான் தன்னை டைகர் ஷெராப்பை கொலை செய்ய ஏவினார்கள் என்றும் அதற்கான ஆயுதங்கள் வாங்குவதற்காக தனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும் போலீசில் பொய்யாக ஒரு மிரட்டலை அவர் வெளியிட்டார் என்பதும் விசாரணையில் பெரிய வந்துள்ளது. தற்போது அவர் மீது எப் ஐ ஆர் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.