வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
எதையாவது புதிதாக செய்தால்தான் ரசிகர்களை கவர முடியும் என்பதால் தற்போதைய இளைஞர்கள் புதிதுபுதிதாக யோசிக்கிறார்கள். அந்த வரிசையில் ஜெகன் வித்யா என்பவர் ஒரே திரையில் இரண்டு படங்களை காட்டும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். படத்தின் டைட்டில் பிகினிங். இந்த படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர மூர்த்தி இசை அமைக்கிறார். வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ஜெகன் வித்யா கூறியதாவது: ஒரே திரையில் இரண்டு படங்களை திரையிடுவதை 'ஸ்பிலிட் ஸ்கிரீன்' என்று சொல்வார்கள். திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
ஒரே திரையில் ஓடும் இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கும், கடைசியில் இரு கதைகளும் ஒன்றாக இணையும், இது உலகிலேயே புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சில குறும்படங்கள் இதுபோன்று வந்திருக்கிறது. ஒரு முழுநீள திரைப்படமாக ஆசியாவிலேயே புதிய முயற்சி என்று சொல்லலாம். என்கிறார்.