‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு நடத்தும் 20வது சர்வதேச திரைப்பட விழா ராயப்பேட்டை பிவிஆர் திரையரங்கில் நேற்று தொடங்கியது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. என்றாலும்கூட சர்வதேச திரைப்பட விழா எளிமையான முறையில் நடந்தது. தற்போது நிலைமைகள் சரியாகி எல்லா விழாக்களும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விழாவும் சிறப்பாக தொடங்கி உள்ளது. இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் வழங்கி உள்ளது.
சமீபத்தில், வழங்கப்படாமல் இருந்த 6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை வழங்கினோம். தற்போது. 2017 முதல் 2021 வரையிலான திரைப்படங்கள், திரைப்பட கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளை வழங்க தேர்வு குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த விருதுகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் இறுதியில் நன்றி தெரிவித்து பேசிய இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் செயலாளரும், விழா ஒருங்கிணைப்பாளருமான தங்கராஜ் “இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது” என்று அறிவித்தார்.
விழாவில் சர்வதேச திரைப்பட கலைஞர்கள், விருது பட நடுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற 22ம் தேதி வரை நடக்கிறது. சுமார் 50 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. சிறந்த தமிழ் படங்களுக்கும், கலைஞர்களுக்--ம் 9 விருதுகள் வழங்கப்படுகிறது.




