இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், மலையாள சினிமாக்களில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் சீனியர் நடிகை ரேவதி சமீபகாலமாக இந்த இரண்டு மொழிகளிலும் அதிக படங்களில் நடிக்கவில்லை.. காரணம் அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வந்தார். கஜோல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட இளம் செஸ் விளையாட்டு வீரன் ஒருவனை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ரேவதி.
அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் இந்த கதையை சொன்னதற்காக ரேவதிக்கு பாலிவுட்டில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியும் ரேவதிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது, “பெண் இயக்குனர்களுக்கு மட்டுமல்ல.. ஆண் இயக்குனர்களுக்கும் ரேவதி ஒரு உற்சாக தூண்டுகோலாக இருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.