சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

பிக்பாஸ் வீட்டில் ஷிவின், கதிர், குயின்சி என்றொரு முக்கோண காதல் கதை சில நாட்கள் ஓடியது. சிவின், கதிர் மீதான தனது காதலை மறைமுகமாக சொல்ல கதிர் அதை புரியாதது போலவே நடித்து மறுத்துவிட்டார். இதனையடுத்து தான் குயின்சியும் கதிரும் நெருக்கமாக சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைபார்த்து பொதுமக்களே குயின்சியும் கதிரும் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள குயின்சி, ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் கதிரை உண்மையாக காதலித்தீர்களா? என்று கேட்க, 'சிவினை வெறுப்பேத்தவே நானும் கதிரும் பிராங்க் செய்தோம். உண்மையாக காதலிக்கவில்லை' என்று கூறினார்.




