கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

பிக்பாஸ் வீட்டில் ஷிவின், கதிர், குயின்சி என்றொரு முக்கோண காதல் கதை சில நாட்கள் ஓடியது. சிவின், கதிர் மீதான தனது காதலை மறைமுகமாக சொல்ல கதிர் அதை புரியாதது போலவே நடித்து மறுத்துவிட்டார். இதனையடுத்து தான் குயின்சியும் கதிரும் நெருக்கமாக சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைபார்த்து பொதுமக்களே குயின்சியும் கதிரும் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள குயின்சி, ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் கதிரை உண்மையாக காதலித்தீர்களா? என்று கேட்க, 'சிவினை வெறுப்பேத்தவே நானும் கதிரும் பிராங்க் செய்தோம். உண்மையாக காதலிக்கவில்லை' என்று கூறினார்.




