தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? |

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக என்ட்ரி ஆகி உள்ள படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வருகிற 9ம் தேதி படம் வெளிவருவதை தொடர்ந்து படக்குழுவினருடன் இணைந்து வடிவேலு புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நடந்த கலந்துரையாடல் ஒன்றில் வடிவேலு கூறியிருப்பதாவது: என்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அப்படி நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னப்பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலு ரொம்ப திமிரு பிடித்தவன், என்ன ஆட்டம் போடுகிறான் என்றெல்லாம் புரளியை கிளப்பிவிடுகிறார்கள்.
என்னோட படத்தை, காமெடியை மக்கள் ரசிக்கனும், அதற்காக நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அது பிடிக்காதவர்கள் பொறாமையில் இதுபோன்று பேசுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ரசிக்கிறார்கள் அதுபோதும் எனக்கு. என்று கூறியுள்ளார்.