'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண். இன்னும் பெயரிடப்படாத ராம்சரணின் இந்த 15வது படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியன்-2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கிய ஷங்கர், இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மாறி மாறி இயக்கி வந்தார்.
அந்தவகையில் நியூசிலாந்தில் ராம்சரண், கியாரா அத்வானி இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தார் ஷங்கர். இந்தநிலையில் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் படக்குழுவினர். ஷங்கர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக உப்பென்னா இயக்குனர் புஜ்ஜிபாபு சேனா டைரக்சனில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் ராம்சரண்.