25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
இந்தியத் திரையுலகத்தில் அதிகம் கவனிக்கப்படாத திரையுலகமாக கன்னடத் திரையுலகம் இருந்து வந்தது. அது 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் வரும் வரையில் தான். அதன்பின் கன்னட சினிமாவை பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலைக் கடந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதற்கடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா' படமும் வசூல் சாதனையைப் புரிந்துள்ளது. மொத்தமாக 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் 'கேஜிஎப் 2' வசூலை முந்தியதாக கன்னட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கேஜிஎப் 2' வசூலித்த 160 கோடி தான் இதுவரையில் கர்நாடகாவில் ஒரு கன்னடப் படத்திற்கான அதிக வசூலாக இருந்துள்ளது. அதை 'காந்தாரா' 170 கோடி வசூலித்து முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாம். மற்ற தென்னிந்திய, ஹிந்தி மொழிப் படங்களை விடவும் 'கேஜிஎப் 2, காந்தாரா' படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.