விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
இந்தியத் திரையுலகத்தில் அதிகம் கவனிக்கப்படாத திரையுலகமாக கன்னடத் திரையுலகம் இருந்து வந்தது. அது 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் வரும் வரையில் தான். அதன்பின் கன்னட சினிமாவை பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலைக் கடந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதற்கடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா' படமும் வசூல் சாதனையைப் புரிந்துள்ளது. மொத்தமாக 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் 'கேஜிஎப் 2' வசூலை முந்தியதாக கன்னட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கேஜிஎப் 2' வசூலித்த 160 கோடி தான் இதுவரையில் கர்நாடகாவில் ஒரு கன்னடப் படத்திற்கான அதிக வசூலாக இருந்துள்ளது. அதை 'காந்தாரா' 170 கோடி வசூலித்து முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாம். மற்ற தென்னிந்திய, ஹிந்தி மொழிப் படங்களை விடவும் 'கேஜிஎப் 2, காந்தாரா' படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.