சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. தமிழை விட தெலுங்கு, மலையாளத்தில் அவருக்கு சிறந்த படங்களும், கதாபாத்திரங்களும் கிடைத்துள்ளன. தமிழில் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
வேறு எந்த மொழிகளிலும் புதிய படங்களை சாய் பல்லவி ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் சாய் பல்லவி மருத்துவமனை ஒன்றைக் கட்ட உள்ளதாக டோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது. ஜார்ஜியா நாட்டில் டாக்டருக்குப் படித்து முடித்தவர் சாய் பல்லவி. அங்கு படித்துக் கொண்டிருக்கும் போதுதான் மலையாளப் படமான 'பிரேமம்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
டாக்டருக்குப் படித்து முடித்துவிட்டு இன்னும் அதற்கான பணியில் இறங்காமல் இருப்பது குறித்து சாய் பல்லவி யோசித்து வந்தாராம். எனவே, சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி அங்கு தனது டாக்டர் பணியை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நடித்துக் கொண்டே அந்த பணியையும் பார்ப்பாரா அல்லது சில வருடங்களில் நடிப்பை விட்டு விலகுவாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.