முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் | 20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் |
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், கமல்ஹாசன், அமலா, டினு ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் 1987ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளிவந்த படம் 'பேசும் படம்'. படத்தின் பெயர்தான் 'பேசும் படம்', ஆனால், படமோ பேசாத படமாகத்தான் வெளிவந்தது. படத்தில் வசனக் காட்சிகளே கிடையாது. இந்தியா முழுவதும் அப்போதே படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் 'பேசும் படம்', வட மாநிலங்களில் 'புஷ்பக்', கேரளா, ஆந்திராவில் 'புஷ்பக விமானம்', கர்நாடகாவில் 'புஷ்பக விமானா' என்ற பெயர்களில் வெளியானது. ஆனால், அந்த ஆண்டிற்காக வழங்கப்பட்ட 35வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னட சினிமாவாக எடுத்துக் கொள்ளப்பட்டு, முழு பொழுதுபோக்கு படமாக அமைந்ததற்கான தேசிய விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது.
நேற்றுடன் இந்தப் படம் வெளிவந்து 35து ஆண்டுகள் ஆனதையொட்டி படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன், ““என்னுடைய இயக்குனர்களிலேயே இளமையானவர் சிங்கீதம் சீனிவாசராவ்தான். நாங்கள் உருவாக்கிய 'புஷ்பக்' இப்போது எங்களை விட மூத்துவிட்டது. அதற்கு 35 வயதாகிறது. சிங்கீதம் சார்... நாம் நமது கலையை மூப்படைய விடாதிருப்போம் சார்...” இதற்கும் நீங்கள் களுக்கென்று சிரிப்பீர்கள். அந்தச்சிரிப்புதான் இன்றும் எனக்குப் பிரியமான இசை,” என படத்தைப் பற்றி டுவிட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.