ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல வருடங்களாக காதலித்த சமந்தாவும், நாகசைதன்யாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்தனர். அவர்கள் திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர்களை சேர்த்து வைக்க இரண்டு குடும்பமும் எடுத்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. இந்த நிலையில் பல படங்களில் நடித்து வரும் சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்வதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தின் போது இருவரும் எடுத்த போட்டோ என்று சமூகவலைதளத்தில் ஒரு போட்டோ வைரலானது.
ஆனால் இந்த போட்டோ உண்மையில்லை. சில விஷமிகள் இருவரின் தனித்தனி போட்டோவை எடிட் செய்து இப்படி ஒன்றாக இருப்பது போன்று செய்துள்ளனர். அதை சுட்டிக்காட்டும் விதமாக படத்தில் இருவருக்கும் பின்னால் உள்ள சுவர்கள், தரைத்தளம் ஆகியவற்றை குறிப்பிட்டு இது போலியான படம் உறுதியாக தெரிவித்துள்ளனர்.