கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களை தொடர்ந்து கன்னடத்திலிருந்து இன்னும் ஒரு வெற்றிப்படமாக வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. கர்நாடகாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என நான்கு மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, வெளியிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்த சமயத்தில் படம் வெளியான சில வாரங்களிலேயே இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக்குழுவாக இயங்கி வரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் ஏற்கனவே உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பி என்கிற சர்ச்சை எழுந்தது.
இதை காந்தாரா பட இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் மறுத்தாலும் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. அதனையடுத்து காந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து படத்திலிருந்து அந்த பாடல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இணைக்கப்பட்டது. தற்போது ஒடிடி தளத்தில் வெளியானாலும் கூட வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டு புதிய பாடலை இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இந்த புதிய பாடல் குறித்த தங்களது அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக வராஹ ரூபம் பாடலுக்கும் நவரசம் பாடலுக்கும் சம்பந்தம் இல்லை. மீண்டும் வராஹ ரூபம் பாடலையே காந்தாரா படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கேரள நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்கிறார்கள். இது பொய்யான செய்தி என கூறுகிறார்கள்.