பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
வெங்கட்பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாகசைதன்யா நடிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நாகசைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‛கஸ்டடி' என பெயரிட்டுள்ளனர். இதில் நாகசைதன்யாக போலீசாக நடிக்கிறார். ஆனால் அவரை ஏகப்பட்ட போலீசார் துப்பாக்கிமுனையில் பிடித்து வைத்திருப்பது போன்று இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலானது.