20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
வெங்கட்பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாகசைதன்யா நடிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நாகசைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‛கஸ்டடி' என பெயரிட்டுள்ளனர். இதில் நாகசைதன்யாக போலீசாக நடிக்கிறார். ஆனால் அவரை ஏகப்பட்ட போலீசார் துப்பாக்கிமுனையில் பிடித்து வைத்திருப்பது போன்று இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலானது.