தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? |
குஜராத்தின் சூரத் நகரில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நமீதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதாவுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று இரட்டை குழந்தை பிறந்தது. அதையடுத்து தனது குழந்தைகள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத் நகரில் பெயர் சூட்டு விழா அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அப்போது நமீதாவின் மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, மற்றும் கியான்ராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து நமீதா சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கிருஷ்ணா ஆதித்யா, கியான்ராஜ் என்ற இரண்டு பிள்ளைகளும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கடவுள் கிருஷ்ணர் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள். அதன் காரணமாகவே இரண்டு குழந்தைகளுக்கும் கிருஷ்ணரின் பெயரை சூட்டி உள்ளேன். சூரத்தில் நடைபெற்ற இந்த பெயர் சூட்டு விழாவில் எனது உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் என்று நமீதா பதிவிட்டு இருக்கிறார்.