அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
குஜராத்தின் சூரத் நகரில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நமீதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதாவுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று இரட்டை குழந்தை பிறந்தது. அதையடுத்து தனது குழந்தைகள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத் நகரில் பெயர் சூட்டு விழா அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அப்போது நமீதாவின் மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, மற்றும் கியான்ராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து நமீதா சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கிருஷ்ணா ஆதித்யா, கியான்ராஜ் என்ற இரண்டு பிள்ளைகளும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கடவுள் கிருஷ்ணர் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள். அதன் காரணமாகவே இரண்டு குழந்தைகளுக்கும் கிருஷ்ணரின் பெயரை சூட்டி உள்ளேன். சூரத்தில் நடைபெற்ற இந்த பெயர் சூட்டு விழாவில் எனது உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் என்று நமீதா பதிவிட்டு இருக்கிறார்.