சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோல் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனபோதிலும் விஜய்யின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் -அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதேபோல் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு இரண்டு ஏரியாக்களுக்கு விஜய் -அஜித் படங்களுக்கு சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கூடிய சீக்கிரமே அஜித் - விஜய் படங்கள் தமிழகம் முழுக்க எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக போகிறது என்பது குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.