மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா |

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோல் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனபோதிலும் விஜய்யின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் -அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதேபோல் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு இரண்டு ஏரியாக்களுக்கு விஜய் -அஜித் படங்களுக்கு சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கூடிய சீக்கிரமே அஜித் - விஜய் படங்கள் தமிழகம் முழுக்க எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக போகிறது என்பது குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.