திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நாளை மறுதினம்(செப்., 5) உலக அளவில் வெளியாக உள்ள தமிழ்ப் படம் 'தி கோட்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். அந்த மொழிகளில் வெளியான படத்தின் டிரைலர், பாடல்கள் ஆகியவற்றிற்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, வட இந்திய மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 'தி கோட்' படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சங்கத்தினர் ஒரு படம் தியேட்டர்களில் வெளியானால் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை கட்டுப்பாடாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும்படி அவற்றின் தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களுக்கு படங்களை விற்கிறார்கள். அதன் மூலம் ஒரு பெரும் தொகை அவர்களுக்குக் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் எந்த ஒரு பெரிய படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடித்து ஓடுவதே அதிகம் என்ற நிலைதான் உள்ளது.
'தி கோட்' படத்திற்கான வட இந்திய வெளியீடு குறித்து அதன் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும், மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் சங்கத்தினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, வட இந்தியாவில் சிங்கிள் தியேட்டர்களில் மட்டுமே 'தி கோட்' படம் வெளியாகிறது. அங்கு படத்தை வெளியிடும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 500க்கும் மேற்பட்ட இடங்களில் 1000க்கும் கூடுதலான தியேட்டர்களில் வட இந்தியாவில் இப்படம் வெளியாகிறது என அறிவித்துள்ளது.
செப்டம்பர் 6ம் தேதி வெளியாவதாக இருந்த கங்கனா ரணாவத் நடித்த 'எமர்ஜென்சி' படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 'தி கோட்' படத்திற்கு பெரிதாக எந்த போட்டியும் இல்லை. எனவே, வட இந்திய மாநிலங்களில் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் படத்தை வெளியிட்டிருந்தால் அந்த வசூல் சாதனை வசூலாக இருந்திருக்குமே என விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.