இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில ஆண்டுகளாகவே கமர்சியல் படங்களை குறைத்துக் கொண்டு வித்தியாசமான கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட்டிலும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் தற்போது அவர் நடித்துள்ள என்கிற 'சுப்' என்கிற திரைப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் திரையரங்குகளில் அல்ல... நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியாகிறது.
சீனி கம், பா, ஷமிதாப், பேடுமேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு கலைஞனின் பழிவாங்கல் என்கிற டேக் லைனுடன் இந்த படம் உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி இந்த படத்தில் முதன்முறையாக சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்தப்படம் இதுவரை தான் நடித்த படங்களிலேயே தனக்கு ஒரு பரிசோதனை முயற்சியான படம் என்றும் இது வழக்கமான ஒரு துப்பறியும் படமாக இல்லாது, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிற, இதயத்தை நிறுத்தி துடிக்க வைக்கும் விதமான ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக சன்னி தியோல் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பால்கியின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.