தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை சாச்சி இயக்கியிருந்தார். இந்த படத்தின் துவக்க காட்சியிலேயே இடம்பெற்ற கலக்காத்தா சந்திரமேரா என்கிற பாடலை அட்டப்பாடி மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகியான நஞ்சியம்மா என்பவர் பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுடன் நஞ்சியம்மாவின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அந்தப் பாடலுக்காக நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
மேலும் அய்யப்பனும் கோஷியும் படத்தில் சில நிமிடங்கள் மட்டும் வந்துபோகும் மிகச்சிறிய வேடம் ஒன்றிலும் நடித்து இருந்தார் நஞ்சியம்மா. இந்த நிலையில் தற்போது டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாகும் திரிமூர்த்தி என்கிற படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நஞ்சியம்மா. அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சரத்லால் நேமிபுவன் என்பவர் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.