மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கன்னடத்தில் வெளியாக காந்தாரா ஆகிய படங்கள் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், பொன்னியின் செல்வன், காந்தாரா படங்களில் வரும் காட்சிகள் ஹிந்து மற்றும் இந்திய தன்மை நிறைந்த காட்சிகளாக இடம்பெற்றுள்ளது. இந்த படங்கள் ஹிந்துமதம் தொடர்புடையதாக இருப்பதால்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் சினிமா நம்முடைய கலாச்சாரத்தில் இருந்து விலகி செல்கிறது. இதன் காரணமாகவே இந்திய தன்மையுடன் உருவாகும் தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்று வருகின்றன. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நம்முடைய மக்கள் நம் கலாச்சார ரீதியான படங்களுக்கு வரவேற்பு கொடுக்க தொடங்கி விட்டார்கள் என்பது இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரனாவத்.