ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் பிருந்தாவனம், எவடு, ஊப்பிரி, மகரிஷி போன்ற படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் தற்போது விஜய் நடிப்பில் பொங்களுக்கு திரைக்கு வரவுள்ள வாரிசு படத்தை இயக்கியிருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் பற்றி சில தகவல்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதில், விஜய்யை யாராலும் அடிச்சுக்க முடியாது. அவர் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் நேர்மை, ஒழுக்கம், பேஷன் இந்த மூன்று அவரிடத்தில் உள்ளது. இந்த மூன்றும் ஒருவரிடத்தில் இருந்து விட்டால் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் அந்த பேட்டியில் வம்சி பைடி பள்ளி தெரிவித்திருக்கிறார்.