இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
தமிழில் 'பொன்னியின் செல்வன்', கன்னடத்தில் 'காந்தாரா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே அந்தந்த மொழிகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
'பொன்னியின் செல்வன்' படம் வெளியான அன்றே பான் இந்தியா படமாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. ஹிந்தி, தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. தெலுங்கில் சுமார் 18 கோடியும், ஹிந்தியில் 23 கோடியும் மட்டுமே இதுவரையில் வசூலித்துள்ளது.
அதே சமயம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹிந்தி, தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான 'காந்தாரா' படம் தெலுங்கில் சுமார் 30 கோடியும், ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகை 'பொன்னியின் செல்வன்' படத்தின் வசூலை விட அதிகம். தெலுங்கில் சுமார் 2 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட 'காந்தாரா' 15 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.