''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு மொழிகளிலும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என மாறி மாறி பணியாற்றி வருகிறார்கள். பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஐதாராபாத்தில் மட்டும்தான் நடந்து வருகிறது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு, சமீப காலத்தில் தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு பக்கமும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் பக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழிலிருந்து தெலுங்கிற்கு ஷங்கர், வெங்கட் பிரபு ஆகியோர் தற்போது சென்று படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் முன்பாகச் சென்ற லிங்குசாமி இயக்கத்தில் இரு மொழிப் படமாகத் தயாரான 'த வாரியர்' படம் தெலுங்கில் படுதோல்வி அடைந்தது. ஷங்கர், வெங்கட் பிரபு இயக்கி வரும் படங்கள் அடுத்த ஆண்டுதான் வெளியாகும்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள இயக்குனர்களில் கேவி அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படம் கடந்த வாரம் வெளியானது. இதற்கு முன்பு 'டான், டாக்டர்' இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் 'ப்ரின்ஸ்' படத்தில் எதிர்பாராத தோல்வியைப் பெற்றுள்ளார். எதற்கு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார் என்றுதான் அவருடைய ரசிகர்களே கேள்வி கேட்கிறார்கள்.
தெலுங்கிலிருந்து அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படமும், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படமும் வெளிவர உள்ளன. அவற்றிற்கு முன்னோட்டமாக தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கிய 'ப்ரின்ஸ்' தோல்வி அடைந்துள்ளதால் 'வாத்தி, வாரிசு' படங்கள் குறித்து தமிழ் ரசிகர்களுக்கு லேசான பயம் ஏற்பட்டுள்ளது. அந்த பயத்தை இரண்டு தெலுங்கு இயக்குனர்களும் போக்குவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.