ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே படங்களில் நடித்திருந்தார். தற்போது நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், ‛நான் காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நிறைய நடித்துவிட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் உள்ளன. மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளேன். கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடித்துள்ளேன். எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனரை நான் நிர்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்' என்றார்.