சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே படங்களில் நடித்திருந்தார். தற்போது நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், ‛நான் காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நிறைய நடித்துவிட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் உள்ளன. மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளேன். கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடித்துள்ளேன். எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனரை நான் நிர்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்' என்றார்.