டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

செப்டம்பர் மாதத்தில் வெளியான இரண்டு படங்களான 'பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய படங்கள் மொத்தமாக 700 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளன. தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்தது. அதே தினத்தில் கன்னடத்தில் தயாரான 'காந்தாரா' படம் வெளிவந்தது. வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
200 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாரான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் மட்டும் 500 கோடி வசூலைத் தொட உள்ளது. 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 'காந்தாரா' படத்தின் வசூல் 'பொன்னியின் செல்வன்' வசூலை விட அதிகமாக இருக்கிறது. சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் மற்ற மொழிகளில் 'காந்தாரா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
தியேட்டர்களில் ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரண்டு படங்களும் ஓடிடி வெளியீட்டிலும் மோத உள்ளன. இரண்டு படங்களும் அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்கும் ஓடிடி தளத்திலும் போட்டியுடன் கூடிய அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




