‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த படம் 'லைகர்'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் படத்தை வாங்கியவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான பூரி ஜெகன்னாத்திடம் நஷ்ட ஈடு கேட்டனர் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையாத நிலையில் பூரி ஜெகன்னாத் வீட்டை முற்றுகையிடப் போவதாக வினியோகஸ்தர்கள் வாட்சப் மூலம் தகவலைப் பரப்பினர். அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார் இயக்குனர் பூரி ஜெகன்னாத்.
இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக துன்புறுத்தி பணத்தைப் பெற, பிளாக் மெயில் செய்வதாகவும், படத்தின் வினியோகஸ்தர்களான வாரங்கல் சீனு, மற்றும் பைனான்சியர் சோபன் ஆகியோர் மீது ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர்கள் இது தொடர்பாக சட்டப்படி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும், அதை விடுத்து என்னை மிரட்டக் கூடாது. நான் தற்போது மும்பையில் இருப்பதால் ஐதராபாத்தில் இருக்கும் எனது வீட்டில் உள்ள வயதான எனது மாமியார், மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.