ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த படம் 'லைகர்'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் படத்தை வாங்கியவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான பூரி ஜெகன்னாத்திடம் நஷ்ட ஈடு கேட்டனர் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடையாத நிலையில் பூரி ஜெகன்னாத் வீட்டை முற்றுகையிடப் போவதாக வினியோகஸ்தர்கள் வாட்சப் மூலம் தகவலைப் பரப்பினர். அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார் இயக்குனர் பூரி ஜெகன்னாத்.
இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக துன்புறுத்தி பணத்தைப் பெற, பிளாக் மெயில் செய்வதாகவும், படத்தின் வினியோகஸ்தர்களான வாரங்கல் சீனு, மற்றும் பைனான்சியர் சோபன் ஆகியோர் மீது ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர்கள் இது தொடர்பாக சட்டப்படி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும், அதை விடுத்து என்னை மிரட்டக் கூடாது. நான் தற்போது மும்பையில் இருப்பதால் ஐதராபாத்தில் இருக்கும் எனது வீட்டில் உள்ள வயதான எனது மாமியார், மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.