நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஹைலைட்டான அம்சமாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகளை துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், “என்னுடைய நீண்ட நாட்கள் காத்திருப்பு கிட்டதட்ட தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. மாமன்னன் மூலமாகத்தான் இது நிகழ்ந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்த கூட்டணி சாத்தியமானதற்கு உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.