சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' |

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஹைலைட்டான அம்சமாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகளை துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், “என்னுடைய நீண்ட நாட்கள் காத்திருப்பு கிட்டதட்ட தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. மாமன்னன் மூலமாகத்தான் இது நிகழ்ந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்த கூட்டணி சாத்தியமானதற்கு உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.