ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் |
16 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் லைலா. சர்தார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தனது ரீ-என்ட்ரி குறித்து அவர் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பிறகு மனைவியாக, தாயாக எனக்கு நிறைய கடமைகள் இருந்தது. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அவங்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. இதனால், சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய கணவர் மும்பையில் பிசினஸ் செய்கிறார். அதனால் குடும்ப பொறுப்பு அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன்.
16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான நல்ல கதைக்கு காத்திருந்தபோதுதான் மித்ரன் வந்தார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும் சூர்யாவுடன் நடித்து பாப்புலர் ஆனேன். இப்போது அவரது தம்பி மூலம் ரீ-என்ட்ரி ஆகுறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது சினிமா நிறைய மாறி இருக்கிறது. மரத்தை சுற்றி டூயட் பாடுகிற ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. கதைக்குள் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்தும் இருக்கிறது. நல்ல சினிமாக்களை, வித்தியசமான சினிமாக்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை படைப்பாளிகள் கொடுக்க வேண்டும் என்கிறார் லைலா.