எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
16 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் லைலா. சர்தார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தனது ரீ-என்ட்ரி குறித்து அவர் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பிறகு மனைவியாக, தாயாக எனக்கு நிறைய கடமைகள் இருந்தது. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அவங்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. இதனால், சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய கணவர் மும்பையில் பிசினஸ் செய்கிறார். அதனால் குடும்ப பொறுப்பு அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன்.
16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான நல்ல கதைக்கு காத்திருந்தபோதுதான் மித்ரன் வந்தார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும் சூர்யாவுடன் நடித்து பாப்புலர் ஆனேன். இப்போது அவரது தம்பி மூலம் ரீ-என்ட்ரி ஆகுறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது சினிமா நிறைய மாறி இருக்கிறது. மரத்தை சுற்றி டூயட் பாடுகிற ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. கதைக்குள் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்தும் இருக்கிறது. நல்ல சினிமாக்களை, வித்தியசமான சினிமாக்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை படைப்பாளிகள் கொடுக்க வேண்டும் என்கிறார் லைலா.