நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தனுஷ் நடித்த ‛3', கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு சில மியூசிக் ஆல்பங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு ஹிந்தியில் ‛ஓ சாதி சால்' என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அது குறித்த எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விரைவில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பூஜை நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும், அந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் நவம்பர் மாதத்தில் நடக்கும் படத்தின் பூஜையின் போது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.