சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி இப்படம் வெளியானாலும் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்தது. உலக அளவில் படத்தின் வசூல் ரூ.450 கோடியைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று(அக்., 19) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டப்பிங் ஆன மற்ற மொழிகளில் பெரிய அளவில் இப்படம் வசூலிக்கவில்லை. இதர மாநிலங்களில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்தது. ஆந்திரா, தெலங்கானா என தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், வட இந்திய மாநிலங்களிலும் இப்படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற முடியாமல் போனது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணின் பெரும் பகுதியை ஆண்ட சோழப் பேரரசின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ராஜராஜசோழனின் பெருமைகள் என்னென்ன என படக்குழுவினர் வட இந்திய மாநிலங்களில் நிறையவே பேசினார்கள். இருப்பினும் எதிர்பார்த்ததை விடவும் குறைவான வசூலே கிடைத்தது. அங்கெல்லாம் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் ஆயிரம் கோடி வசூலையும் கடந்திருக்கும்.
நாளையுடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பெரும்பான்மையான தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வருகிறது. நாளை மறுதினம் அக்டோபர் 21ம் தேதி 'சர்தார், பிரின்ஸ்' ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது. எனவே, அதற்குப் பின் குறைவான தியேட்டர்களில்தான் இப்படம் ஓட வேண்டிய சூழ்நிலை. எனவே, ரூ.500 கோடி வசூலைத் தொடுமா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே உள்ளது.